நாட்டின் டெங்கு புதிய பிறழ்வொன்று பரவி வருவதாக கொழும்பு ரிஜ்வே ஆர்யா வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேர தெரிவிக்கின்றார்.
மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
”டெங்கு 3″ என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிறழ்வினால், நோய் அறிகுறிகள் விரைவாக தென்படும் எனவும் அவர் கூறுகின்றார்.
கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களிலேயே இந்த புதிய பிறழ்வு வேகமாக பரவி வருவதாக அவர் குறிப்பிடுகின்றார்;.
நாட்டில் இதுவரை ”டெங்கு 2″ பிறழ்வே பரவி வந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் காணப்படுமாயின், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நுளம்பு பரவக்கூடிய வகையிலான இடங்களை உடனடியாக சுத்திகரித்து, டெங்கு நோய் பரவுவதை தடுத்து நிறுத்த மக்கள் உடனடியாக செயற்பட வேண்டும் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
டெங்கு நோய் தொற்றிய 50 சிறார்கள், கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக டொக்டர் தீபால் பெரேர தெரிவிக்கின்றார்.