கடந்த இரண்டு மற்றும் இன்றைய தினங்களில் மாத்திரம் சந்தைக்கு 220,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவிக்கின்றது.
லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சமையல் எரிவாயு கேள்வியை பூர்த்தி செய்யும் வகையில், நாளாந்தம் 90,000 முதல் 100,000 வரையான எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனம் தெரிவிக்கின்றது.
சந்தையில் தற்போது எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாட்டை, குறுகிய காலத்திற்குள் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. (TrueCeylon)