லெபனானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய பல நபர்களில் இலங்கைப் பெண்ணொருவரும் அடங்குவதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மன்சூரியிலஇடம்பெற்றுள்ளது. இதில் ஐந்து மாடிக் கட்டிடமே இடிந்து விழுந்துள்ளது.
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. .
சிவில் பாதுகாப்பு, செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இராணுவம் தற்போது இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள நபர்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், நேற்றிரவு இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் லெபனான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.