மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவசாளரை, பெண் தவிசாளர் கட்டியணைத்ததாக கூறப்படும் சம்பவம் தற்போது பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளார்.
2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்புக்காக கடந்த 8ம் திகதி சபை கூடியுள்ளது.
இந்த நிலையில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் குளறுபடிகள் ஏற்படக்கூடும் என எழுந்த சர்ச்சையின் போது, கோரளைப்பற்று வாழைச்சேனை தவிசாளரான சோபா ரஞ்ஜித், உபத் தவிசாளர் தர்மலிங்கம் யசோதரனை கட்டியணைத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
சோபா ரஞ்ஜித், தனது ஆடைகளை தானே கிழித்துக்கொண்டே, பிரதி தவிசாளரை அணைத்துக்கொண்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
எனினும், தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, தவிசாளர் சோபா ரஞ்ஜித், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தவிசாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரதி தவிசாளர் தர்மலிங்கம் யசோதரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினரான மொஹமட் பூஹாரி மொஹமட் பசுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்களும், வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோரளைப்பற்ற – வாழைச்சேனை பிரதேச சபையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சி செய்கின்றது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுயேட்சைக்குழுக்கள் இரண்டு கைக்கோர்ந்துள்ளன.
எதிர்க்கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன செயற்பட்டு வருகின்றன. (TrueCeylon)
VIDEO SOURCES :- NEWS 1ST