மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 35 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 21 வயதான இளைஞர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காணிப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட முறுகல் நிலைமையே இந்த கொலைக்கு காரணம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்தில் காயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவரையே பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.