சுகாதார அமைச்சின் (MoH) கீழ் உள்ள தொழுநோய் தடுப்புப் பிரிவு (LPU) இலங்கையில் 10% தொழுநோயாளிகள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக உள்ளதாக ஒரு தகவலை தெரிவித்துள்ளது.
தொழுநோய் எதிர்ப்பு பிரச்சாரத்தின் பணிப்பாளர் டாக்டர். பிரசாத் ரணவீர, சிறந்த தொழுநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் கொண்ட நாட்டில் குழந்தை தொழுநோயாளிகளின் சதவீதம் 4% க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், மொத்தம் 1,155 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர், இதில் 10% தொழுநோயாளிகள் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக உள்ளனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் புதிய முயற்சிகள் அவசியம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.