வவுனியா − நெடுங்கேணி பகுதியில் பெருந்தொகை வெடிப்பொருட்களை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நெடுங்கேணியில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்த குறித்த நபரின் வீட்டிலிருந்து, பெருந்தொகையான வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஒன்றிணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே, இந்த வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு − ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த 32வயதான சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் கண்ணிவெடி அகற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றில் கடமையாற்றியவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post