மரண தண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறைச்சாலையில் ஒழுக்கத்துடன் செயற்பட்ட கைதிகளை விடுதலை செய்வது குறித்து சிறைச்சாலைகள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தவினால், உரிய தரப்பினருக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது.
சிறைக் கைதிகளை விடுதலை செய்து குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஒழுக்கத்துடன் செயற்பட்ட கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. (TrueCeylon)