மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்வாய்ப்புக்களை இழந்து நிர்க்கதிக்குள்ளான நிலையில், சுமார் 35000திற்கும் அதிகமான இலங்கையர்கள், தமது நாட்டிற்கு வருகைத்தர எதிர்பார்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 18000 பேர் தமது தொழில்வாய்ப்புக்களை இழந்தவர்கள் எனவும், எஞ்சிய தரப்பினர் தொழில் நிபந்தனை கால எல்லை நிறைவடைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
டுபாய், அபுதாபி, சவுதி, ஜோர்தான், கட்டார், லெபனான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலேயே இவர்கள் பாதிக்கப்பட்டு, நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு மற்றும் கொவிட்-19 தடுப்புக்கான செயற்பாட்டு மையம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும், ஊடகப் பேச்சாளருமான மங்கள ரந்தெனிய தெரிவிக்கின்றார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறுவோரின் எண்ணிக்கைக்கு அமையவே, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அழைத்து வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.