நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை நாளைய தினம் (25) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
சுற்றுலாத்துறையின் அங்கீகாரமுடைய ஹோட்டல்களை தவிர்ந்த ஏனைய அனைத்து இடங்களிலும் உள்ள மதுபானசாலைகள் நாளைய தினம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)