மேல் மாகாணத்திற்கு அடுத்தப்படியாக கண்டி மாவட்ட மக்களுக்கு கொவிட் தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்டினிக் தடுப்பூசிகளின் முதல் தொகையை, கண்டி மாவட்டத்திற்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் வாரமளவில் கண்டி மாவட்டத்தில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தகுதி பெறும் அனைவருக்கும், இந்த தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
மேல் மாகாணத்திற்கு அடுத்தப்படியாக கண்டி மாவட்டமே மிகவும் அச்சுறுத்தல் மிக்க மாவட்டமாக காணப்படுகின்றது என சுகாதார தரப்பினர் அடையாளம் கண்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Discussion about this post