இணைய வழியாக மதுபானங்களை விற்பனை செய்ய நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ள போதிலும், மதுபானங்களை விற்பனை செய்ய உடனடியாக அனுமதி வழங்க முடியாது என கலால்வரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சின் அனுமதியை அடுத்து, கொவிட்-19 தடுப்புக்கான செயலணியின் அனுமதி கிடைக்க வேண்டும் என கலால் வரித் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தடுப்புக்கான செயலணியின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னரே, மதுபானங்களை இணைய வழியாக விற்பனை செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், கலால் வரித் திணைக்களத்திற்கு நாளாந்தம் சுமார் 600 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ள வருவதாக கலால் வரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. (TrueCeylon)
Discussion about this post