மூன்று மணித்தியாலத்தில் கொழும்புக்குள் 62 000க்கும் அதிகமான வாகனங்கள் வருகைத்தந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்கள் அனைத்தும் அத்தியாவசிய சேவை பணியாளர்களை அழைத்து செல்லும் வாகனங்களா என்று உறுதிப்படுத்திக் கொள்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேல்மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் மேல்மாகாணத்திலிருந்து வெளியேறும் 3,969 வாகனங்கள் கண்காணிக்கப்பட்டுள்ளதுடன் , அவற்றில் பயணித்த 4,191 நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கமைய 3 மணிநேரத்திற்குள் 62 ஆயிரத்து 235 வாகனங்கள் கொழும்புக்குள் வருகைதந்துள்ளன.
கொழும்புக்குள் வருகைத்தரும் வாகனங்களை கணக்கீடு செய்வது மட்டுமன்றி , அந்த வாகனங்களில் வருகைத்தருபவர்கள் பணிக்காக அழைக்கப்பட்டுள்ளனரா? , அவர்கள் அத்தியாவசிய சேவை பணியாளர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளது.
இந்த சுற்றிவளைப்புக்காக ஆறு பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் , இதன்போது பொலிஸார் எரிய பின்தொடர்ந்து அதனை உறுதிப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன்போது தொழிலுக்கு செல்பவர்கள் தங்களது நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை பொலிஸாருக்கு காண்பிக்க வேண்டியது கட்டாயமாகும்.
Discussion about this post