வவுனியா – செட்டிகுளம், மருதமடுவ பகுதியில் 7 வயது சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் நேற்றைய தினம் மாலை தனது உறவுக்கார பெண் ஒருவருடன் வயல்பகுதிக்கு சென்றுள்ளான்.
நீண்ட நேரமாகியும குறித்த சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து பெற்றோர்கள் உறவினர்களால் தேடுதல் நடாத்தப்பட்டது.
இதன்போது குறித்த சிறுவன் வயல்பகுதியில் விழுந்து கிடப்பதை அவதானித்த பெற்றோர்கள் அவனை உடனடியாக மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் குறித்த சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முன்னமே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் மருதமடு பகுதியை சேர்ந்த வீரசிறி தேனுகருக்சான் என்ற 7 வயது சிறுவனே மரணமடைந்துள்ளான். பாம்பு தீண்டி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Discussion about this post