சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த வசந்த கருணாகொட எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதி சோபித ராஜகருணா மற்றும் தம்மிகா கனேபொல முன்னிலையில் வசந்த கரன்னகொட தாக்கல் செய்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
2009இல் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணமால் ஆக்கப்பட்ட சம்பவத்தில் 14 வது சந்தேகநபராக இவர் பெயரிப்பட்டார்.
கடந்த ஓகஸ்ட் 4 ஆம் ஆம் திகதி, வசந்த கருணாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றின் விசேட ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.