ஜின்ஜியாங்கின் வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள சீன அதிகாரிகள், புத்தகங்களை எரிக்கும் பிரச்சாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு உய்குர் எழுத்தாளருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“Child of the Eagle” என்ற சிறு கதை தொடரை எழுதிய நாவலாசிரியர் “அடம் உமர்” கடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து காணாமல் போய் உள்ளதாக வாஷிங்டனை தளமாக கொண்ட “ரேடியோ பிரீ ஆசியா” (RSA) தெரிவித்துள்ளது.
ஒமர் கஷகர் மாகாணத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதட்கு பின்பு அவரது சகோதரரும் பேரனும் பிடிபட்டனர்.
கைதுக்கான காரணமாக உமரின் சகோதரரின் மகனை எகிப்து நாட்டுக்கு அனுப்பி பின் அவர் மூலியமாக பணம் பெற்றுக்கொண்டது. என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடம் ஒமர் 92017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் திகதி அவரது இல்லத்தில் இருந்து கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன.
2018 ஆம் ஆண்டு க்ஸிஞ்சிங் மாகாண தலைநகரமான உரும்கியில் ரகசிய விசாரணையின் பின் பிரிவினையை தூண்டினார் என குற்றம் சாட்டப்பட்டு
அடம் ஒமரை சிறையில் அடைத்தனர்.
ஒமரின் படைப்புக்கள் பல 2020 ஆம் ஆண்டு சீன அதிகாரிகளால் எரிக்கப்பட்டன. அவற்றில் “child of the eagle” அடங்கும்.
இப்புத்தகத்தின் தாக்கம் காரணமாக உய்குர் இன மக்களின் உரிமைகளும் சுகந்திரமும் தூண்டப்படுவதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
தேசிய மட்டத்தில் இலக்கிய படைப்புகளான இந்த புத்தகத்திற்கு எவ்விதமான எதிர்ப்புகளும் வரவில்லை.
இருந்தாலும் 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் உய்குர் இன மக்களின் பிரிவினைவாதத்திட்கு இது உடந்தையாக இருப்பதால்.
சகல இலக்கிய படைப்புகளும் கைப்பற்றப்பட்டன.
உலக நாடுகளின் எதிர்ப்பையும் தாண்டி உகுர் முஸ்லீம் மக்களை தடுப்பு முகாம்களில் அடைத்து கொடுமை படுத்துகிறது. (ANI)
Discussion about this post