நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா நிலைமையை கட்டுப்படுத்த குறைந்தது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முழுமையாக மூடப்பட வேண்டும்.
அவ்வாறு செய்வதான் மூலம் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தலாம் என பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன கூறுகிறார்.
இந்த திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது நடைபெறவுள்ள சிறப்புக் கூட்டத்தில் ஜனாதிபதியுடன் இது குறித்து விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கோவிட் 19 நோயை கட்டுப்படுத்தும் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரிவுகளுக்கும் கூடுதலாக, தொற்றுநோயியல் நிபுணர்களின் குழு இந்த கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்கு ஜனாதிபதியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்கும் என்று உபுல் ரோஹன மேலும் தெரிவித்தார்.
இந்த ஆண்டு வெசாக் திருவிழாவிற்கு பந்தல்கள், தன்சல்கள் போன்ற பொதுமக்கள் கூட்டத்தை அனுமதிக்க வேண்டாம் என்று தனது சங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாளுக்கு நாள் மிகவும் தீவிரமாகி வருவதால் பொதுமக்கள் நிலைமை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.(Hiru)
Discussion about this post