கொரோனா தொற்று காரணமாக பொருளாதார பாதிப்பை எதிர்நோக்கிய இரு வர்த்தகர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் − பருத்தித்துறை பகுதியில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
வடமராட்சி கிழக்கு பகுதியைச் சேர்ந்த 34 வயதான வர்த்தகர் ஒருவர், கடலுணவு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடலுணவு விநியோகத்திற்காக தவணை கொடுப்பனவு முறையில் கொள்வனவு செய்த குளிரூட்டி அடங்கிய லொறிக்கான தவணை கொடுப்பனவை செலுத்த முடியாமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 36 வயதான சைக்கிள்களை வாடகைக்கு வழங்கும் தொழிலில் ஈடுபட்ட வர்த்தகர் ஒருவர், பொருளாதார சிக்கல் காரணமாண தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
உயிரிழந்த இருவரது சடலங்கள் மீதும் PCR பரிசோதனை நடத்தப்பட்டதுடன், அவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கொரோனா காரணமாக பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமைக்கு தற்கொலை தீர்வு கிடையாது என மனநல வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post