இன்று (11) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நேற்று நள்ளிரவு முதல் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் பல கலந்துரையாடல்களை அடுத்து இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படும் என இராணுவத் தளபதி அறிவித்தார்.
இதேவேளை, மே 30 வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் இன்று (11) நள்ளிரவு முதல் மே 30 வரை நடைமுறைக்கு வரும்.
இருப்பினும், இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்கு பொருந்தாது என்று ராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
Discussion about this post