இனிவரும் காலங்களில் கொவிட் உயிரிழப்புக்கள் தொடர்பிலான அறிவிப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சுகாதார தரப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இதன்படி, கொவிட் உயிரிழப்பு நேர்ந்த 24 அல்லது 48 மணிநேரத்திற்குள் அதற்கான அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நடவடிக்கையை இன்று முதல் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய, 24 முதல் 48 மணித்தியாலங்களுக்கு கொவிட் தொற்றினால் நேர்ந்த அனைத்து உயிரிழப்புக்களையும் அறிவிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவிக்கின்றார். (TrueCeylon)
Discussion about this post