இலங்கையில் கொவிட் 3வது அலை ஏற்பட்டுள்ளதை அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரண ஏற்றுக்கொண்டார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை ஏற்றுக்கொண்டார்.
கொவிட் 3வது அலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரிப்பதற்காக நிதியை பெற்றுக்கொள்ளும் வகையில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராட்ச்சியினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.
கடந்த காலங்களில் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகிய நிலையில், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் கட்டில்களுக்கான தட்டுப்பாடு நிலவியதாகவும் அவர் தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் தற்போது 14,455 கட்டில்கள் காணப்படுவதாகவும், எதிர்வரும் ஓரிரு தினங்களில் கட்டில்களின் எண்ணிக்கையை 3000 வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இதற்கான நடவடிக்கைகளை கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிக்கின்றார்.
Discussion about this post