Tuesday, November 28, 2023
Trueceylon News (Tamil)
English
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment
No Result
View All Result
Trueceylon News (Tamil)
English
No Result
View All Result
Home Breaking News

வெளிநாடுகளிலிருந்து இன்று முதல் நாட்டிற்கு வருகைத்தரும் நடைமுறை?

admin by admin
June 1, 2021
in Breaking News, இலங்கை
Reading Time: 1 min read
249
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram
விளம்பரம் விளம்பரம் விளம்பரம்
ADVERTISEMENT

இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு பயணிகள் வருகைத் தர தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிக்கின்றார்.

நாட்டில் பரவிவரும் கொவிட் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன், அனைத்து விமான நிலையங்களும் நேற்று (31) வரை மூடப்பட்டிருந்தன.

எனினும், நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களையும் இன்று (01) முதல் திறக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

இலங்கைக்கு வருகைத் தரும் அனைத்து பயணிகளும், 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைத் தரும் பயணிகள், அந்தந்த நாடுகளில் PCR பரிசோதனைகளை நடத்தி, கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படாத பட்சத்தில் மாத்திரமே இலங்கைக்கு வருகைத் தர முடியும் என இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவிக்கின்றார்.

இவ்வாறு இலங்கைக்கு வருகைத்தரும் பயணிகள், நாட்டிற்குள் வருகைத் தந்தவுடனேயே, மற்றுமொரு PCR பரிசோதனையை நடத்த வேண்டும் என அவர் கூறுகின்றார்.

அதனைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு, நாட்டிற்கு வருகைத் தந்த 10 முதல் 14 நாட்களுக்குள் மற்றுமொரு PCR பரிசோதனையை நடத்த வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க தெரிவிக்கின்றார். (TrueCeylon)

Previous Post

நிஜத்தில் வந்த 10 ரூபா டொக்டர் − கொவிட் தொற்றாளர்களுக்காக 10 ரூபா மாத்திரமே அறவீடு

Next Post

இரத்தினபுரியில் 9 மரணங்களுடன் மேலும் அதிகரித்த கொவிட் உயிரிழப்புக்கள்

Next Post

இரத்தினபுரியில் 9 மரணங்களுடன் மேலும் அதிகரித்த கொவிட் உயிரிழப்புக்கள்

Discussion about this post

Flash News

  • (VIDEO/PHOTOS) – இறக்குவானை நகர் நீரில் மூழ்கியது l பாலம் உடைந்தது

    (VIDEO/PHOTOS) – இறக்குவானை நகர் நீரில் மூழ்கியது l பாலம் உடைந்தது

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை மத்திய வங்கியினால் 10,000 ரூபாய் நாணயத்தாள் அச்சடிக்கப்பட்டதா?

    0 shares
    Share 0 Tweet 0
  • கண்டி நகரை அண்மித்து அதிவுயர் அபாய எச்சரிக்கை l பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

    0 shares
    Share 0 Tweet 0
  • உயர்தர பரீட்சை தொடர்பான பரீட்சைகள் திணைக்களத்தின் புதிய அறிவிப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • சவூதியில் ஆணிகளை உட்கொண்டு, கொடூரத்தை அனுபவித்த இராமசந்திரன் தர்ஷனி (PHOTOS)

    0 shares
    Share 0 Tweet 0
Trueceylon News (Tamil)

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
  • வணிக செய்திகள்
  • Special Segment

Copyright © 2023 Trueceylon.lk All Rights Reserved