வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ இன்று (17) முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா கூறினார்.
கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும், பதிவு திருமணத்தை நடத்துவதற்கு தடை கிடையாது என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
வீட்டிலோ அல்லது வேறொரு இடத்திலோ பதிவு திருமணத்தை நடத்துவதற்கு அனுமதி உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
பதிவு திருமணத்திற்காக திருமண தம்பதி, இரு தரப்பைச் சேர்ந்த பெற்றோர், திருமண பதிவாளர் மற்றும் இரண்டு சாட்சியாளர்கள் மாத்திரம் கலந்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவிக்கின்றார்.
இவர்களை தவிர, வேறு எந்தவொரு தரப்பிற்கும் பதிவு திருமண நிகழ்வில் கலந்துக்கொள்ள அனுமதி கிடையாது எனவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார். (TrueCeylon)
Discussion about this post