கொவிட் சட்டங்களை மீறி, பொருள் கொள்வனவுகளில் ஈடுபடும், மக்கள் தொடர்பில் தான் கவலை அடைவதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
மக்கள் இவ்வாறு கட்டுபாடின்றி செயற்படும் பட்சத்தில், எதிர்வரும் மே மாதம் முதல் மிக மோசமான பெறுபேறுகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.
சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் கொவிட் தொடர்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது செயற்படும் பட்சத்தில், வேறு எந்தவொரு பண்டிகைகளையும் கொண்டாட முடியாது போகும் என அவர் கூறுகின்றார்.
பெருமளவான மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு காரணமாக கொவிட் தொற்றை கட்டுப்படுத்த முடிந்ததாகவும் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
Discussion about this post