மட்டக்களப்பு – கல்லடி திருச்செந்தூர் பகுதியில் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மீன்களுடன் துப்பாக்கியொன்றும் கடலிலிருந்து அகப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கியானது கல்லடி, திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்கு பின்னாலுள்ள கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களின் மீன்படி வலையிலேயே T56 ரக துப்பாக்கி அகப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் துப்பாக்கியை மீட்டுள்ளதுடன், காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபட்ட எவரேனும் கடலில் எறிந்துவிட்டு சென்றிருக்கலாமென பொலிஸாா் சந்தேகிப்பதாக பொலிஸாா் தெரிவித்தனா்.