வேறு மாகாணங்களிலிருந்து நுவரெலியாவுக்கு வருகை தருவோரை உடனடியாகத் திருப்பி அனுப்புமாறு நுவரெலியா பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதமும் உயிரிழப்பு வீதமும் குறைவடைந்து வரும் இவ் வேளையில் வெளிமாகாணங்களில் இருந்து நுவரெலியாவிற்கு வருபவர்கள் மூலம் மீண்டும் தொற்று அதிகரிக்கலாம்.
ஆகையால் வெளி மாகாணங்களிலிருந்து நுவரெலியாவிற்கு வருவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். வெளி மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முறைகளில் நுவரெலியாவுக்கு வருகை தருவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இங்கு வருபவர்களை திருப்பி அனுப்பும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.