ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று பசில் ராஜபக்ஷ நடத்திய செய்தியாளர் சந்திப்பு குறித்து இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த ஊடக சந்திப்பு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சனத் ஜயசூரிய, இந்த ஊடக சந்திப்பு குறித்து தான் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ‘முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும் விடயம் அல்ல. எங்கள் நாட்டின் எதிர்காலம் பாழாகிவிட்டது. நீங்கள் பொறுப்பேற்கவில்லை. இந்த அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்’ என பதிவிட்டுள்ளார்.