ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவான ரிஷாட் பதியூதீனின் கட்சியுடன் இனி கூட்டணி அமைக்க போவதில்லை என அந்த கட்சியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.்
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் 20வது திருத்தச் சட்டம், துறைமுக நகர் சட்டமூலம், நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட அனைத்துக்கும் ரிஷாட் பதியூதீனின் கட்சியிலுள்ள 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் கை உயர்த்தியிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
ரிஷாட் தரப்பினர் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குகின்றமையினால், அவர்களை தமது கூட்டணியில் இணைத்துக்கொள்ள போவதில்லை எனவும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். (TrueCeylon)
Discussion about this post