ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக திலங்க சுமத்திபாலவை நியமிக்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
சற்று முன்னர் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், கட்சியின் செயற்குழு இன்று கொழும்பில் கூடியது.
இதன்போது, திலங்க சுமத்திபாலவை, பொதுச் செயலாளராக நியமிக்கும் பரிந்துரை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்வைக்க பரிந்துரையை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. (TrueCeylon)