குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 விளக்கமறியல் கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இன்று குருநாகல் நீதிமன்ற சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த கைதிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூன்று பேரையும் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(trueceylon)
Discussion about this post