தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதில், சர்வதேச உதவியுடன் இலங்கையை ஸ்திரப்படுத்தும் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதை தேசிய பொறுப்பாக கருதி, அதை நிறைவேற்ற கட்சி பேதங்களை கருத்தில் கொள்ளாது தமது அரசாங்கத்துடன் கைக்கோர்க்குமாறு ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்பு விடுப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு சஜித்துக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்த போது, ஜனாதிபதி பதவி விலகாமல் பிரதமர் பதவியை ஏற்க மாட்டேன் என்று சஜித் பதில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, புதிய பிரதமராக ரணில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரணிலின் இந்த அழைப்புக்கு சஜித் வழங்கும் பதில் என்ன என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.