மேலும் மூன்று நாடாளுமன்ற பொலிஸ்அதிகாரிகளுக்கு நேற்று (1) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மூன்று அதிகாரிகளில் இரண்டு பேர் பொலிஸ் பரிசோதகர்களாக இருந்தனர்.
நாடாளுமன்றில் இதுவரை 9 பொலிஸ் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களில் 5 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை மையங்களை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பொலிஸ் பிரிவின் 75 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், நாடாளுமன்றம் 8 ஆம் திகதி மீண்டும் கூட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post