பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பல தரப்பிலிருந்தும் பல எதிர்ப்புகள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.
மேலும் பிரதான சந்தேகநபர்கள் உட்பட 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் இலங்கையர்களிடம் மன்னிப்பு கோரும் வகையில் டுவிட்டர் பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“அனைத்து இலங்கையர்களிடமும்…. “பாகிஸ்தானியர்” என கூறுவதில் வெட்கமடைகின்றேன். பைத்தியக்கார பயங்கரவாத குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட அமானுஷ்ய செயற்பாட்டுக்கு தயவு செய்து, எம்மை மன்னித்துக்கொள்ளுங்கள்.” என குறிப்பிட்டுள்ளார்.
මගේ සියලුම ශ්රී ලාංකික මිතුරන් වෙත! අද පකිස්ථානුවෙක් වීම ගැන මට ලැජ්ජයි. පිස්සු ත්රස්තවාදී කල්ලියක් විසින් කරන ලද අමානුෂික ක්රියාවට කරුණාකර අපට සමාව දෙන්න. 🙏 https://t.co/bf5CTQFau8
— Sehar Shinwari (@SeharShinwari) December 3, 2021