நோர்வூட் பிரதேச சபையிலுள்ள மூவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், பிரதேச சபை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்களுக்கும், பிரதேச சபை நூலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கும் இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச சபையில் ஏற்கனவே இருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னணியில், அவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளிலேயே இன்று மூவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (TrueCeylon)
Discussion about this post