நிக்கவரெட்டிய ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த இரு பெண்களின் சடலங்கள் மாற்றப்பட்டுள்ளதால் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
மஹவ பகுதியில் வசிக்கும் 81 வயது பெண்ணின் உடலும், நிக்கவரெட்டிய பகுதியில் வசிக்கும் 67 வயது பெண்ணின் உடல்களும் மாற்றப்பட்டுள்ளன.
அதன்படி, மஹவ பகுதியில் உயிரிழந்த 67 வயதுடைய பெண்ணின் சடலம் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
சடலம் மஹவ பகுதியில் உள்ள ஒரு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதையடுத்து நிக்கவரெட்டிய பகுதியில் இறந்த பெண்ணின் உடலை மீட்க உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்தபோது, அது அவர்களது உறவினர் அல்ல என்பதை அறிந்த பின்னர் அவர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் நிக்கவரெட்டிய பகுதியில் உயிரிழந்த பெண்ணின் பேரன் கருத்து தெரிவிக்கையில்,
“என் பாட்டியை நேற்று முன்தினம் மாலை வைத்தியசாலையில் அனுமதித்தோம். அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நிலையில் இறந்து விட்டார்.
இவரது மாதிரிகள்குருநாகலுக்கு அனுப்பப்பட்டு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அவரது உடலை பொறுப்பேற்க வைத்தியசாலைக்கு வந்தோம். அங்கு பல உடல்கள் இருப்பதைக் கண்டேன். ஆனால் எனது பாட்டியில் உடல் அங்கு இல்லை. நான் அதிகாரிகளிடம் கேட்டேன், அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ”
வைத்தியசாலை தரப்பில் முறையான பதில் அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி, நிக்கவரெட்டிய பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டது..
இதற்கிடையில், வைத்தியசாலையில் ஒரு செவிலியர் சம்பவ இடத்திற்கு வந்து உயர் அதிகாரிகளால் ஒரு முடிவு எடுக்கும் வரை தன்னால் எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார்.
Discussion about this post