இறக்குவானை − தெமுவத்த − ஸ்டோர் கடை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இராணுவ நினைவு தூபி மற்றும் அதற்கு அருகாமையிலிருந்த புத்த சிலையொன்றுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தமக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறித்த இடத்தில் வழிபாட்டு தலமொன்றை நிர்மாணிப்பதற்கு கடந்த காலங்களில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதிலும், சிலரது எதிர்ப்பு காரணமாக அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதற்கு முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்திற்கும், இராணுவ நினைவு தூபி மற்றும் புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவத்திற்கும் இடையில் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக இருவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறக்குவானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (TrueCeylon)
Discussion about this post