காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருபவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து தற்போது, லோட்டஸ் சுற்றுவட்டத்தில் அனைத்து பிரதான நுழைவாயில்களையும் மறித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி செயலகத்தின் லோட்டஸ் சுற்றுவட்டத்தின் இரண்டு நுழைவாயில்களையும் மறித்து, மேடைகளை அமைத்துள்ளனர்.
இதனால், லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.