Monday, August 8, 2022
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு
No Result
View All Result
Trueceylon News (Tamil)
No Result
View All Result
Home உலகச்செய்திகள்

மனைவியின் பிறப்புறுப்பை அலுமினியம் வயரால் தைத்த ஆண் கைது

March 23, 2021
in உலகச்செய்திகள்
Reading Time: 1 min read
0
SHARES
238
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Telegram

திருமண பந்தத்திற்கு வெளியே உறவு கொண்டிருப்பதாக தமது மனைவியை சந்தேகித்த உத்தரப் பிரதேச ஆண் ஒருவர் மனைவியின் பிறப்புறுப்பை அலுமினியம் வயர் கொண்டு தைத்ததாக திங்களன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராம்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நிகழ்ந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த ஆண் தமது மனைவியைத் தாக்கி, அவரது பிறப்புறுப்பைத் தைத்த பின்பு அவரது வீட்டில் இருந்து தப்பியோடிவிட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிகுந்த வலியில் இருந்த அந்த மனைவி அருகில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் தமது தாயாரிடம் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைப்பதற்கு அழைப்பு விடுத்த அவரது தாயார், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தார்.

முதலில் அருகிலுள்ள உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண், பின்பு மேலதிக சிகிச்சைக்காக கூடுதல் வசதியுடைய அரசு மருத்துவமனைக்கு பின்னர் அழைத்துச் செல்லப்பட்டார்.

பிறப்புறுப்பு அலுமினியம் வயரால் தைக்கப்பட்ட அந்த பெண் மிகுந்த வலியுடன் மருத்துவமனைக்குச் செல்லும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.

அதில் அவரது தாய் மற்றும் இன்னொரு பெண் பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்கின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆணின் காணொளியைப் பதிவு செய்த உத்தரப் பிரதேச காவல் துறையினர் அதை வெளியிட்டுள்ளனர்.

“எனது மனைவி கிராமத்தில் உள்ள பிற ஆண்களை சந்தித்து வந்தார். அவர்களுடன் முறையற்ற உறவு கொண்டிருந்தார். அது குறித்து கேள்வி எழுப்பிய நான் அது சரி இல்லை என்று அவரிடம் கூறி வந்தேன். அவருக்கு தேவையானவற்றை வழங்க எந்த முயற்சியும் நான் கைவிடவில்லை. ஆனால் நான் மிகுந்த கோபமுற்ற நேரத்தில், அலுமினியம் வயரை எடுத்து அவரது பிறப்புறுப்பைத் தைத்து விட்டேன்,” என்று அந்தக் காணொளியில் அவர் கூறுகிறார்.

தங்களுக்கு இந்த நிகழ்வு குறித்த தகவல் கிடைத்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகவும் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் அடிப்படையில் அவரது கணவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ராம்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷோகன் கௌதம் காவல்துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் காணொளி மூலம் தெரிவித்துள்ளார். (BBC Tamil)

Previous Post

மஸ்கெலிய ஆலயத்தில் கொவிட் கொத்தணி

Next Post

பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் : ஒன்று திரண்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் (VIDEO/PHOTO)

Next Post

பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் : ஒன்று திரண்ட ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் (VIDEO/PHOTO)

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest
ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களின் விபரங்கள் வெளியானது

இலங்கையில் வேகமாக பரவும் பிரித்தானிய வைரஸ்! அடுத்து வரும் நாட்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

May 13, 2021
இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

இலங்கை : இரவிரவாக தொடரும் தமிழர் போராட்டம் (VIDEO)

January 9, 2021
அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

அரசியல் பிரவேசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்

December 29, 2020

விளையாட்டு விமானங்களை செய்து, பறக்க விட்ட நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம் (VIDEO)

February 15, 2021

கொவிட் தொற்றில் உயிரிழப்போரின் உடல்கள் புதைக்கப்படும் − பிரதமர் உறுதி

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணி – தடைகளை தாண்டி தொடர்கின்றது (PHOTOS)

மூழ்கிய இந்திய மீனவப் படகிலிருந்து இரு சடலங்கள் மீட்பு

இறக்குவானை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா?

சீன கப்பலின் வருகை தாமதமாகின்றது – அவசர பேச்சுவார்த்தைக்கு சீனா கோரிக்கை

சீன கப்பலின் வருகை தாமதமாகின்றது – அவசர பேச்சுவார்த்தைக்கு சீனா கோரிக்கை

August 8, 2022
ஆசிரியர் தினத்தில் போராட களமிறங்கும் ஆசிரியர்கள் – அதிபர்கள் l அதிரடி அறிவிப்பு வெளியானது

ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை

August 8, 2022
IOC எரிபொருள் விலையை அதிகரிக்கும் விதம் l அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க IOCக்கு அனுமதி

August 8, 2022
பிரித்தானியா சென்ற 10 இலங்கை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

பிரித்தானியா சென்ற 10 இலங்கை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

August 8, 2022

Recent News

சீன கப்பலின் வருகை தாமதமாகின்றது – அவசர பேச்சுவார்த்தைக்கு சீனா கோரிக்கை

சீன கப்பலின் வருகை தாமதமாகின்றது – அவசர பேச்சுவார்த்தைக்கு சீனா கோரிக்கை

August 8, 2022
258
ஆசிரியர் தினத்தில் போராட களமிறங்கும் ஆசிரியர்கள் – அதிபர்கள் l அதிரடி அறிவிப்பு வெளியானது

ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை

August 8, 2022
239
IOC எரிபொருள் விலையை அதிகரிக்கும் விதம் l அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை

புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க IOCக்கு அனுமதி

August 8, 2022
333
பிரித்தானியா சென்ற 10 இலங்கை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

பிரித்தானியா சென்ற 10 இலங்கை வீரர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

August 8, 2022
420
Trueceylon News (Tamil)

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved

Navigate Site

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • சர்வதேசம்
  • விளையாட்டு

Copyright © 2022 Trueceylon.lk All Rights Reserved