சிறைச்சாலைகள் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தான் தொடர்ச்சியாக குரல் எழுப்புவதாக மேஜர் அஜித் பிரசன்ன தெரிவிக்கின்றார்.
சிங்கள யூடியூப் சேனல் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 13,000 பேர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள் என்றால், சிறைச்சாலையிலுள்ள இந்த சுமார் 80 பேரை ஏன் விடுவிக்க முடியாது என அவர், ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புகின்றார்.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில், யுத்தம் காரணமாக சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர் கூறுகின்றார்.
ஏனினும், தமிழ் அரசியல் கைதிகளை சிறைக்குள் வைத்து, தமிழ் அரசியல்வாதிகள், அவரை விற்பனை செய்வதாகவும் அவர் குற்றஞ்சுமத்துகின்றார். (SL Articles)
Discussion about this post