தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த கமல்ஹாசனின் காரை மர்ம நபர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதில் முன்பக்க கார் கண்ணாடி உடைந்தது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தை முடித்துவிட்டு திரும்பிய போது காந்தி சாலையில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட கட்சி தொண்டர்கள் அந்த மர்ம நபரை தாக்கினர்.
இதனால் காயமடைந்த அந்த நபர் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(TrueCeylon)
Discussion about this post