கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஜப்பான் – சீனா என இரு நாடுகளும் உரிமை கோரும் தீவுகளுக்கு அருகே சீனாவின் புதிய எழுச்சியைச் கட்டுப்படுத்த ஜப்பான் தனது ஆயுதப்படைகளை அனுப்புவது குறித்து ஆலோசிப்பதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
கிழக்கு சீனக் கடலில் அமைந்துள்ள, குடியேற்றப்படாத தீவுகள் ஜப்பானில் சென்காக்கஸ் என அழைக்கப்படுகின்றன. இவற்றுக்கு தைபே சீனா மற்றும் ஜப்பானால் உரிமை கோரப்படுகின்றன.
இந்த நிலையில் ஜப்பானிய கட்டுப்பாட்டில் உள்ள டையோயு தீவுகளுக்கு அருகே சீன கடலோர காவல்படை தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளதாக தென் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, சீனாவின் இராணுவப் படை வெளிநாட்டுக் கப்பல்களுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
சீனா தனது நீரில் சட்டவிரோதமாக மற்ற நாடுகள் நுழைவதாக கருதி இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஜப்பானிய கடலோர காவல்படையின் கூற்றுப்படி,
சீன கடலோர காவல்படை கப்பல்கள் கடந்த ஆண்டு ஒரு மாதத்தில் இரண்டு முறை குறித்த நீர் பகுதிக்குள் நுழையுயும்.
எனினும் பிப்ரவரி முதல் வாரத்திற்கு இரண்டு முறை கிழக்கு சீனக் கடல் பகுதியில் நுழைவது அதிகரித்துள்ளது.
சீன நடவடிக்கைகளால் ஜப்பான் பீதியடைந்துள்ளதாகவும் அதற்கான பதிலை பரிசீலித்து வருவதாகவும் ஜப்பானிய அதிகாரி ஒருவர் தென் சீனா மார்னிங் போஸ்ட்டிடம் தெரிவித்தார்.
“எங்கள் உள்நாட்டுச் சட்டத்தின் கீழ், சீன கடலோர காவல்படை அனுமதியின்றி செங்காகு தீவுகளைச் சுற்றியுள்ள எங்கள் பிராந்திய நீரில் நுழைந்தால், எங்கள் கடலோர காவல்படை சார்பாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தற்காப்புப் படைகள் ஆயுதங்களை சட்ட அமலாக்கமாகப் பயன்படுத்தலாம்” என்று பெயர் குறிப்பிடாத அந்த அதிகாரி கூறினார்.
இதேவேளை சீனா இந்த ஆண்டு ஒரு சட்டத்தை இயற்றியது, இதன் மூலம் கடலோர காவல்படையினருக்கு வெளிநாட்டுக் கப்பல்களில் துப்பாக்கிச் சூடு நடத்தவும், சர்ச்சைக்குரிய நீரில் கட்டப்பட்ட கட்டமைப்புகளை இடிக்கவும் வெளிப்படையாக அனுமதிக்கிறது.
இது அண்டை நாடுகளுடன் பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்பளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post