நெல் மற்றும் மரக்கறி உள்ளிட்ட பெரும்போக பயிர் செய்கைக்கான இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எனினும், உரிய தரத்திலான இரசாயன உரம் மற்றும் கிருமி நாசினிகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க, அத தெரண செய்தி சேவைக்கு இன்று முற்பகல் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, அதனை நிராகரிக்கும் வகையில் தற்போது தகவல் வெளியிட்டுள்ளார். (TrueCeylon)