இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்த், இன்று அதிகாலை கார் விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ரிஷப் பந்த் பயணித்த கார், விபத்துக்குள்ளாகும் CCTV காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தின் கார் தீக்கிரையானது l ரிஷப் பந்த் வைத்தியசாலையில் அனுமதி
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.
தில்லி – டேராடூன் நெடுஞ்சாலையின் ரூர்க்கி எல்லைக்கு அருகில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தை அடுத்து, காரில் தீ பரவி, கார் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.
காயமடைந்த ரிஷப் பந்த் டேராடூனில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.