இந்தியாவில் சர்வதேச பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகளில் மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது.
பல மாநிலங்கள் அனுப்பி வைத்த மாதிரிகளில், புதிய ‘இருமுறை மரபணு உருமாறிய கொரோனா’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை கொரோனா, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாதவை, தொற்றை அதிகப்படுத்தக்கூடியவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
15 முதல் 20 சதவீத மாதிரிகளில் இந்தவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனாக்களுடன் ஒத்துப்போகாமல், இவை புதிய ரகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டியம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன.
இங்கிலாந்து, டென்மார்க், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 16 நாடுகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு இந்த மரபணு உருமாறிய கொரோனாக்கள்தான் காரணமா என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என இந்திய சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Discussion about this post