கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.
12 ஆண்களும் 07 பெண்களுமே நேற்று உயிரிழந்துள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 பேரும் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 07 பேரும் மரணித்துள்ளனர்.