காலி – ஊருகஸ்மங்ஹந்திய – தேவத்தை சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதில் திலுக சந்தருவன் விஜேரத்ன என்ற 30 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நேற்று (02) இரவு சுமார் 11 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவரை உடனடியாக எல்பிட்டிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், அவர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் ஊருகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post