கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்ட காலப் பகுதியை, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று வெளியிட்டார்.
இதன்படி, கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையை பெரும்பாலும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் நடத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை பெரும்பாலும் மார்ச் மாதமளவில் வெளியிட முடியும் என அவர் கூறுகின்றார். (TrueCeylon)