இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு கொல்லப்பட்டவர்கள், சிறையில் அடைக்கப்பட்டவர்கள் மற்றும் அடக்குமுறைக்கு உள்ளானவர்களின் நினைவாக இன்று (9) பிற்பகல் காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தில் பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்ட போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் பெருமளவான பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் காலிமுகத்திடலை விட்டு வெளியேறி, நினைவுப் பாடல்களை பாடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (TrueCeylon)