இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றையடுத்து மூடப்பட்ட பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளை மீண்டும் திறப்பது குறித்த இறுதி முடிவு புதன்கிழமை (12) எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாளை ஒரு முக்கிய கலந்துரையாடல் நடைபெறும் என்றும், இந்த விவாதத்தில் கல்வியாளர்கள் உள்ளிட்ட மருத்துவ நிபுணர்களை அழைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையைக் கருத்திற்கொண்டு அனைத்துப் பாடசாலைகள், பாலர் பாடசாலைகள், அறநெறிப் பாடசாலைகள், தனியார் வகுப்புகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை கடந்த 7 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post