ஆசிரியைகள் பலர் சாரி இல்லாமல் வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத்தந்தமை தொடர்பில் கல்வியமைச்சர் பாராளுமன்றில் நேற்று (நவ.22) தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் அரச சேவையாளர்களுக்காக பொது நிர்வாக அமைச்சு விடுத்த சுற்றறிகையில், இலகுவான ஆடைகளை அணிந்து வருவது தொடர்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அரச சேவையாளர் என்ற வகுதிக்குள் ஆசிரியர்களும் உள்ளடங்குவதாக கூறிய சுசில் பிரேமஜயந்த, பொதுநிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை இன்னும் நடைமுறையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, இந்த விடயத்தில் பொதுநிர்வாக அமைச்சின் விளக்கத்தை தாம் எதிர்பார்ப்பதாக சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார். (TrueCeylon)